இந்தியாவில் இருந்து வரும் முட்டைகள் இன்னும் துறைமுகத்தில்: அதிகாரிகள் மீது வர்த்தக அமைச்சர் குற்றச்சாட்டு
#Egg
#India
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சில அதிகாரிகளின் நாசவேலையால் துறைமுகத்தில் முட்டை கையிருப்பு தேங்கியுள்ளது என அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதிகாரிகளின் சீர்குலைவு நடவடிக்கையினால் பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு முட்டை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



