இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்
#weather
#Rain
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.