இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 'தேசிய மனித நேய விருது' வழங்கினார
.jpg)
தேசிய மனிதநேய விருது என்பது அமெரிக்காவில் கலைகள் மூலம் மனிதநேயத்தை மேம்படுத்தும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் விருது ஆகும்.
மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்களை இந்த விருது கெளரவிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 'தேசிய மனித நேய விருது' வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை மிண்டி கலிங்குக்கு இந்த உயரிய விருதை வழங்கி ஜனாதிபதி ஜோ பைடன் கவுரவித்தார்.
வேரா மிண்டி சொக்கலிங்கம் என்றும் அழைக்கப்படும் மிண்டி காலிங், 43 வயதான ஒரு நடிகை, நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
மிண்டி கலிங்கைத் தவிர, ஜோ பிடன் மேலும் பதினொரு பேருக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியுள்ளார். விருது வழங்கும் விழாவில் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



