உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளில் தலையீடு இல்லை: சர்வதேச நாணய நிதியம்
#SriLanka
#Sri Lanka President
#IMF
#sri lanka tamil news
#Election
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என சர்வதேச நாணயம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணையில் இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி உதவி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



