இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

#SriLanka #Sri Lanka President #weather #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் தற்பொழுது நிலவும் காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 1 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (21) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!