இலங்கையில் இதுவரையில் ஒருவரே லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் - கலாநிதி நவீன் டி சொய்சா
#doctor
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

இலங்கையில் இதுவரையில் ஒருவரே லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில கருத்துக்கள் உண்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கைகளில் மேலும் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



