எரிபொருள் உரிம முறையை நடைமுறைப்படுத்துவது பயனற்றது!
#SriLanka
#Sri Lanka President
#Fuel
#Ajith Nivat Cabral
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

தை 2022 மற்றும் தை 2023 க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது கடுமையான பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார்.
இதனால், தேசிய எரிபொருள் உரிமத்தின் மூலம் வழங்கப்படும் எரிபொருளை மக்கள் வாங்க முடியாத நிலையில், இனியும் எரிபொருள் உரிம முறையை நடைமுறைப்படுத்துவது பயனற்றது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டீசல் பயன்பாடு 54% யிலும் , பெற்றோல் பயன்பாடு 35% யிலும் , மண்ணெண்ணெய் பயன்பாடு 75% யிலும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.



