கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்களுக்கு எதிராக 4,733 புகார்கள் வந்துள்ளன – மத்திய அரசு.

#India #Airport #Flight #Complaint
Mani
3 years ago
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்களுக்கு எதிராக 4,733 புகார்கள் வந்துள்ளன – மத்திய அரசு.

இந்திய விமான நிறுவனங்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புகார்கள், பயணிகளின் உடமைகளுக்கு சேதம், பயணிகள் சேவை, ஊழியர்களின் நடத்தை, விமானத்தில் உணவு போன்றவற்றை உள்ளடக்கியது.

ஏர் இந்தியா மீது 2,550 புகார்களும், இண்டிகோ மீது 853 புகார்களும், ஸ்பைஸ் ஜெட் மீது 476 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ல், ரயில் பெட்டிகள் குறித்து 698 புகார்களும், பயணிகள் சேவை குறித்து 592 புகார்களும், ஊழியர்களின் நடத்தை குறித்து 252 புகார்களும் வந்துள்ளன.

ஏர் இந்தியா மீது 2021ல் 1,208 புகார்களும், 2022ல் 761 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 அக்டோபரில் ஏர் இந்தியாவை டாடா வாங்கிய பிறகு புகார்கள் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4