நாடு முழுவதும் 341 நிலையங்கள் - ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பட்டதாரிகள் ?!
#SriLanka
#sri lanka tamil news
#TamilCinema
#Lanka4
#srilanka freedom party
#education
#Ministry of Education
Prabha Praneetha
2 years ago
அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை பங்குனி மாதம் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் , பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும் .