அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட தகவல்!
#SriLanka
#Food
#prices
#Minister
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

பண்டிகை காலத்தில் நுகர்வோர் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
கடந்த வாரம், ஒரு கிலோ சீனி , 25 – 30 ரூபாய் குறைந்துள்ளது.வெங்காயம், பருப்பு விலை குறைந்துள்ளது. .இதனால், இந்த வாரம் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலை உயரும் என நினைக்கிறோம். ஆனால் பண்டிகை காலத்தில் நுகர்வோர் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும் என்றார் .



