பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதியினால் அழைப்பு
#doctor
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Meeting
#Lanka4
Kanimoli
2 years ago

தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் நிபுணர்களில் தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில், இன்று (13) இரவு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கபப்டும் என சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



