ரூபாய் மதிப்பு உயர்வுகட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை - சுனில் ஹந்துன்நெத்தி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்
ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்ற என்பதை தீர்மானிக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளித்து, மக்களை ஏமாற்றுவதற்காக ரூபாய் மதிப்பு உயர்ந்துவிட்டது என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது.
இந்தநிலையில், முடிவெடுப்பதில் மத்திய வங்கி தற்போது சுயாதீனமாக செயற்படவில்லை.
அது முழுப் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கவில்லை என்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதாகவும் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.



