ஏப்ரலில் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானம்: காஞ்சன விஜேசேகர
#SriLanka
#Fuel
#prices
#Dollar
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித் தார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விலைச் சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன குறிப்பிட்டார்.



