எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வரிக் கொள்கை மாற்றப்படாது!
#government
#Staff
#IMF
#taxes
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அரசு ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டங்களினால் பொருளாதாரம் மேம்படும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறுகிறார்
எதிர்ப்புகள் இருந்தாலும், வரிக் கொள்கை அப்படியே இருக்கும் என்றும், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.