ஜூன் மாதத்திற்குள் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் -: கெமுனு
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#TamilCinema
#TamilNadu President
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால், ஜூன் மாதத்திற்குள் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜூலை 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தமும் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அந்தவகையில், இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடரும் எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



