தேர்வுக்கு படிக்காததால் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி

#Tamil Nadu #Tamil Student #Tamil People #Tamil #Tamilnews
Mani
3 years ago
தேர்வுக்கு படிக்காததால் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேர்வுக்கு பயந்து மாணவி ஒருவர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கைபேசி அழைப்பில் கழிஞ்சூரில் உள்ள ஜெயின் ஐ சி எஸ் சி தனியார் பள்ளியில் உள்ள வெடிகுண்டு காலை பத்தரை மணி அளவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் வள்ளலார் தெருவில் வசிக்கும் 9ஆவது படிக்கும் மாணவி பேசி இருப்பது தெரிய வந்தது. ((நடைபெறவிருக்கும் புவியியல் தேர்விற்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அந்த மாணவி 100க்கு டயல் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4