தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட கடிதம் நிதியமைச்சருக்கு அனுப்பி வைப்பு!
#Election
#Election Commission
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட கடிதம் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைசச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சக செயலாளருக்கு கடந்த 7ம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்புகிறது.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பண வெளியீட்டிற்கு நிதியமைச்சின் அனுமதி போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் ஆணையத்திடம் விரைவில் நிதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



