கிளிநொச்சியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு!
#SriLanka
#Kilinochchi
#Health Department
#Health
#Cow
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , கால்நடைகளை விற்பனை செய்தல், அப்பகுதி மாடுகளை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லுதல், மாட்டிறைச்சி உண்பது, பசும்பால் அருந்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் முதல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் பல மாகாணங்களில் இந்த நாட்களில் மாடுளுக்கு மிக வேகமாக பரவி வரும் சின்னம்மை போன்ற நோய் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை கிளிநொச்சி சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து எடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் பூனகரி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள், மாட்டுக்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ள போதும், இதுவரையில் இந்நோய் கட்டுப்படுத்தப்படவில்லை.



