உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த திகதி அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு!
#SriLanka
#Sri Lanka President
#Election
#Election Commission
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

சிறிலாங்காவில் உள்ளூராட்சி சபை தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்துவதற்கு உகந்த திகதியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னதாக 2023 மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தபோதும், அது பின்னர் திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த புதிய திகதி தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அத்டன் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இந்த தகவல் அறியப்படுத்தப்பட்டுள்ளது.



