வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகிறார்

#India #PrimeMinister
Mani
3 years ago
வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். சமீபத்தில் நடந்த மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது. அந்த 3 மாநிலங்களிலும் இன்றும் நாளையும் புதிய அரசுகள் பதவியேற்க உள்ளன. இந்த பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அசாம் தலைநகர் கவுகாத்தி செல்லும் பிரதமர் மோடி, இன்று காலை விமானம் மூலம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு செல்கிறார். அங்கு முதல்வர் கான்ராட் கே சங்மா தலைமையில் நடைபெறும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதன்பின், நாகாலாந்து செல்லும் அவர், தலைநகர் கோஹிமாவில் புதிய நாகாலாந்து அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து மாலையில் அசாம் திரும்பும் பிரதமர் மோடி, கவுகாத்தியில் நடைபெறும் அஸ்ஸாம் அமைச்சர்கள் கவுன்சிலில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு, தலைநகர் அகர்தலாவில் நடைபெறும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மோடி நாளை (புதன்கிழமை) திரிபுரா செல்கிறார்.

அசாம்  சுகாதாரத் துறை அமைச்சர் கேசப் மஹந்தா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் அசாமின் சுகாதாரத் துறையின் நிலை பற்றியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4