குழந்தைகளின் கேள் திறன் தொடர்பில் மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!
#SriLanka
#doctor
#children
#child groomin
#baby
#sri lanka tamil news
#Tamilnews
Mayoorikka
2 years ago

முதல் 6 மாதங்களுக்குள் சிறு குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் அடையாளம் காண முடிந்தால், சிகிச்சை மற்றும் குணப்படுத்துவதற்கான நிகழ்தகவு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ரவீந்திர கிரிஹேன, இரண்டு வகையான செவித்திறன் குறைபாடு உள்ளதாக கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



