லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம்

#NuwaraEliya #Accident #Hospital #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம்

நுவரெலியா, லபுக்கலேயில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி காலை லபுகலே பிரதேசத்தில் உள்ள மரக்கறி பண்ணை ஒன்றிலிருந்து மரக்கறிகளை ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வர சென்ற தொழிலாளர்கள் குழுவும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் போட்டபோது, ​​லொறி கட்டுப்பாட்டை இழந்து பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!