வெள்ளோடு அருகே உள்ள பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

#Tamil Nadu #Temple #God
Mani
3 years ago
வெள்ளோடு அருகே உள்ள பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளோடு அருகே உள்ள பழமையான சடையப்ப சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னிமலை  ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு கிராமத்திற்கு உட்பட்ட பள்ளப்பாலத்தில், கொங்கு நாடார் சமூகம், பல்லாங்குளம் குலத்தினர், பாவல்தான் ஆகிய 2 குலங்களைச் சேர்ந்த சடையப்ப சாமி கோவில் உள்ளது.200 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 23 அடி உயர கோபுரம் சிலை சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி காலை யாகசாலைக்கு பலகை வழங்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

1-ந் தேதி  பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தக்குடம், மூலைபரிசையுடன் ஊர்வலமாக கோயிலுக்குச் சென்றனர். அன்று இரவு கோபுரம் மற்றும் சிற்பங்களுக்கு கண் திறப்பு விழா நடந்தது.

அதிகாலை 5 மணிக்கு மேல் ராஜ கணபதி வழிபாடு, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், விநாயகர், சடையப்பசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4