மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்.,யை, பஞ்சாப்க்கு அனுப்ப உத்தரவு
#India
#IndianArmy
#government
Mani
2 years ago
.jpg)
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிப்ரவரி 23 அன்று பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு மதகுரு அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் அஜ்னாலாவில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறையில் அடைக்கப்பட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இதனால் பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக 18 கம்பெனி துணை ராணுவப் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் கலவர தடுப்புப் படையை பஞ்சாப் மாநிலத்தில் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 2,430 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.



