திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சுவாமி-அம்பாள் சந்நிதியில் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

#Tamil Nadu #Tamilnews #Tamil #God
Mani
1 year ago
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சுவாமி-அம்பாள் சந்நிதியில் குடவருவாயில்  தீபாராதனை நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளுக்கு குடவருவாய் தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 5ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு, ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடத்தினர்.

அப்போது கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்பாள் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி  கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித்தேர் மற்றும் அம்மன் இந்திர விமானத்தில் உலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.