இந்த சுவையான மசாலா நீர் மோர் செய்து பாருங்கள்

#Recipe #Preparation #Cooking
Mani
1 year ago
இந்த சுவையான மசாலா நீர் மோர் செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

  • 400 tbsp தயிர்
  • 2 துண்டு இஞ்சி
  • 4 கொத்து கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய் 
  • தேவையான அளவு உப்பு

செய்முறை:

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட 400 கிராம் அளவிலான தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நான்கு பச்சை மிளகாய், இரண்டு துண்டு இஞ்சி, பச்சை கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மையாக அரைத்த தயிருடன் ஒரு லிட்டர் அளவிற்கான தண்ணீரை ஊற்றி ஒரு முறை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். வடிகட்டியை வைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின் இந்த தாளிப்பை மோருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மசாலா நீர் மோர் தயாராகிவிட்டது.