இத்தாலி கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 59 பேர் உயிரிழப்பு!
#world_news
#Italy
#Death
#Pakistan
#Iran
#Lanka4
Mayoorikka
2 years ago
இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கப்பலில் பயணித்த மேலும் முப்பது பேரைக் காணவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.