மறைந்த கருத்தோவியர் பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு!
#SriLanka
#Death
#Crime
#Police
#Women
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இரண்டு பெண்களின் உடல்கள் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கருத்தோவியர் பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்களாவர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சகோதரிகளான மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.



