கொடியேற்றத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தொடங்கியது.

#Tamil Nadu #God #goddess
Mani
3 years ago
கொடியேற்றத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா  தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி, நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

பின்னர், அதிகாலை 5:30 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்தெரு திருவிழா கொடியேற்றம் நடந்தது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சாமி உற்சவம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடைபெற்று வருகிறது.

நான்காம் தேதி காலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11:30 மணிக்கு பச்சை சாத்தி பச்சை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது. காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு வெளி வீதிகளில் பவனி வருகின்றனர். பக்தர்களுக்குக் காட்டுகிறார்கள்.

ஏழாம் நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4