வெளிநாட்டு பெண்ணை செருப்பால் அடித்தவர் கைது
#Arrest
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago
பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவரை செருப்பால் தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் தாக்கும் காணொளி நேற்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது.
சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.