இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது
#Tamil Nadu
#Tamil People
#Tamil
#Tamilnews
Mani
2 years ago

பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்



