வியட்நாமில் பணம் திருட்டு: இலங்கையர் ஒருவர் மீது வழக்கு பதிவு

#SriLanka #Crime #Police #Court Order #Arrest #Lanka4
Mayoorikka
2 years ago
வியட்நாமில் பணம் திருட்டு: இலங்கையர் ஒருவர் மீது  வழக்கு பதிவு

வியட்நாமில் பணம் திருட்டு குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின்படி, 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள 'டான் சோன் நாட்' சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் பிரவேசித்த  42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ஷ என்ற குறித்த இலங்கையர், வேலை தேடுவதற்காக நாடு முழுவதும் பல இடங்களுக்குச் சென்றார்.

கடந்த 2022 ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் சொத்துக்களை திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிந்ததாகவும், அன்று இரவு 8 மணியளவில், உணவகமொன்றுக்குள் நுழைந்து 13 மில்லியன் வியட்நாம் டோங் (545 அமெரிக்க டொலர்) பணம் அடங்கிய கறுப்பு கைப்பையை திருடி தப்பியோடினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பணப்பை திருடப்பட்டதை அறிந்ததும், உணவகத்தின் ஊழியரொருவர் உடனடியாக உதவிக்காக கூச்சலிட்டுள்ளார்.

பின்னர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இலங்கையர் மடக்கிபிடிக்கப்பட்டு தாய் டு வார்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாரென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!