ஹோட்டல் மற்றும் உணவகங்கள் குறித்து சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

#Police #Arrest #Food #Lanka4
Kanimoli
2 years ago
ஹோட்டல் மற்றும் உணவகங்கள் குறித்து சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருப்தியற்ற நிலையில் உள்ள 18% உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

“இலங்கையில் தற்போதுள்ள 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும் 27% சராசரி நிலையிலும் மற்றும் 55% மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன. இலங்கையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 2022 பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவை வெளியிடப்படுகிறது. 

தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55% மும், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27% மும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளன. 

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்று தேவைப்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!