நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் வாள்வெட்டு சம்பவம் - ஒருவர் கைது
#Tamil People
#Tamilnews
#Tamil
#Police
#Arrest
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் நேற்றிரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடயவியல்பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.



