நிதி அமைச்சின் செயலாளருக்கு ஹெலிகாப்டரிலிருந்து கடிதம்
#SriLanka
#Election
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

போதிய பணம் விடுவிக்கப்படாத காரணத்தினால் குறித்த திகதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலைக்கு நிதி அமைச்சின் செயலாளரும் நேரடியாகப் பொறுப்பாவதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
தவறை உடனடியாக சரி செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆஜராக நடவடிக்கை எடுப்பதாகவும், சுதந்திர மக்கள் கூட்டமைப்பு நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



