சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையால் கைது
#SriLanka
#sri lanka tamil news
#Sri Lankan Army
#Lanka4
Kanimoli
2 years ago

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேரை கடற்படை கைதுசெய்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலன் போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், படகு ஒன்று உட்பட, கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.



