பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள்!
#SriLanka
#government
#strike
#Protest
#union
#Lanka4
Mayoorikka
2 years ago

அரசாங்கத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் வேலைநிறுத்தத்தினை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



