கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இன்னும் ஆதரவளிக்கவில்லை: த ஹிந்துஸ்தான் டைம்ஸ்

பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் கடன் இடைநிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு சீனா இன்னும் ஆதரவளிக்கவில்லை என்று "த ஹிந்துஸ்தான் டைம்ஸ்" செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை நீண்ட காலம் எடுக்க முடியாது என "த ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் தெரிவித்துள்ளது. இது 8 தவணைகளில் எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் அடிப்படையில் கடனைப் பெறுவதற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்ததாக "த ஹிந்துஸ்தான் டைம்ஸ்" செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் சீனா இன்னும் கடன் மறுசீரமைப்பு மற்றும் தடை காலம் குறித்து வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளது
இவ்வாறான நிலையில், நிலுவையில் உள்ள கடன்களின் அடிப்படையில் இலங்கையின் கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்து, சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டத்திலோ அல்லது இவ்வருட இறுதியில் சீனாவும் இணைந்து கொள்ளும் வரை காத்திருக்கலாம் என "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்" சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நூறு வருடங்களாக இலங்கை அரசியல்வாதிகளின் விருப்பமான அரசியல் புகலிடமாக சீனா இருந்து வருவதாகவும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் பிரேரணைக்கு இலங்கை இதுவரை பதில் வழங்கவில்லை எனவும் "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியுள்ளதாகவும் "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி நிதிக் கடன் தொகை பெறப்படாவிட்டால், இலங்கையின் பொருளாதாரம் விரைவில் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.



