பிஜிக்கும் இந்தியாவுக்கும் வளமான உறவு உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

#India #world_news
Mani
2 years ago
 பிஜிக்கும் இந்தியாவுக்கும் வளமான உறவு உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் இந்திய-பசிபிக் நாடுகளில் ஒன்றான பிஜிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தில் பிஜியின் துணை பிரதமர் பீமன் பிரசாத் உடன் நேற்று நடந்த சந்திப்பில், இரு நாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என மந்தரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.இதன் பின்னர் நடி நகரில் நடைபெற்ற 12வது விஸ்வ ஹிந்தி கூட்டமைப்பு நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தியாவுக்கும், பிஜிக்கும் நீண்ட நட்புறவு இருப்பதாகவும், 12வது உலக இந்தி மாநாடு வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை (நாளை) நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

நடி நகரில் உள்ள ஸ்ரீசிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுவாமி தரிசனம் செய்தார். சுவா நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை மேம்படுத்தும் வகையில் விசா தள்ளுபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்பு உள்ளது. அவை நம் மக்களுடனான உறவின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை.சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் இதர திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பிஜியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. மேலும், பிஜியுடன் இணைந்து தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடும்.

நாங்கள் கரும்பாலை திட்டங்களில் ஒன்றாக வேலை செய்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். "சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது போன்ற பகுதிகளில் இன்று எங்கள் ஆலோசனையின் ஒரு பகுதி இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!