போதைப்பொருளுடன் பிடிபட்ட வைத்தியர்! பொலிஸார் வகுத்த வியூகம்
#SriLanka
#Police
#Crime
#Arrest
#Badulla
#doctor
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் முதியங்கனை பூஜை பூமிக்கு முன்பாக 145 போதை மாத்திரைகளை பணத்திற்கு விற்பனை செய்ய சென்ற போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வைத்தியர் நீண்டகாலமாக பணத்திற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வியூகத்தை பயன்படுத்தி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியர், 150 மில்லிகிராம் போதைப்பொருள் அடங்கிய 150 மாத்திரைகளுடன் விசாரணைக்காக பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.



