ஏடிஎம் இயந்திரத்தை திருடிய சந்தேகநபர்களிடம் எம்பியின் கைத்துப்பாக்கி
#Arrest
#Police
#Robbery
Prathees
2 years ago
கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்துடன் கூடிய ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஏடிஎம் இயந்திரம் மற்றும் கைத்துப்பாக்கியையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.