அரச வைத்தியசாலைகள் மூடப்படும்..! இலங்கையில் எச்சரிக்கை
#SriLanka
#Tamil People
#Tamilnews
#Hospital
#government
#Lanka4
#sri lanka tamil news
#Tamil
#Medicine
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டு நிலைமை அதிகமாகுமானால் கூடிய விரைவில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து, இலங்கையில் அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அணைத்து அரச வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டால் அத்தியாவசிய சத்திர சிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்னசிங்கமே இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .