காமதேனு விநாயகரை பூஜித்து பெற்ற பெயர் தேனு விநாயகர். பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.

#கணபதி #விநாயகர் #பிள்ளையார் #ஐங்கரன் #ஏகதந்தன்
காமதேனு விநாயகரை பூஜித்து பெற்ற பெயர் தேனு விநாயகர். பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
  • தமிழ்நாடு சேலம் ஆத்தூர் வாகனப்பிள்ளையார் கோயிலில் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரியமூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ளன.
     
  • இந்திரனின் வாகனமான ஐராவதம் இறைவனை பூஜித்தது போல் கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. இதனால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்.
     
  • இந்தியாவின் வந்தவாசிக்கு அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துள் பெரிய சன்னதியில் ஐராவத விநாயகர் உள்ளார். 
     
  • துவார கணபதி ஆலயத்தில் வாயிலின் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனுமாக துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று வீற்றிருப்பார்
     
  • வெல்லத்தைப் பிடித்து வைத்து அதில் பிள்ளையாரை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளையார் வெல்லப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4