செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சேற்றில் சிக்கி பலி!
#SriLanka
#Kilinochchi
#Death
#Lanka4
Reha
2 years ago

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். இவர் கிளிநொச்சி உதய நகர்மேற்கு பிரபல ஊடகவியலாளர் விவேக் அவர்களின் ஒரே ஒரு புத்திரன் ஆவார்.
தமது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு செல்ல நாய்க்குட்டி கிணற்றில் தவறி வீழ்ந்ததால் அதனை மீட்க கயிறைப்போட்டு கிணற்றுக்குள் இறங்கியபோது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கிணற்றுள் வீழ்ந்து மரணமானார்.
அவரின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவரது ஈமை கிரியைகள் ஞாயிறு அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.



