எல் நினோ தாக்கம் : பொய்த்துப் போகும் பருவமழை!! நீர்சேமிப்பு தொடர்பில் அறிவுரை!
பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல் நினோ காலநிலை நிகழ்வு தொடங்கி, தற்போது பலவீனமான நிலையில் இருந்தாலும், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது தீவிரமடையக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எல் நினோ நிலை, இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் காலநிலை முரண்பாடுகளுக்கும் வானிலை மாறுபாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையால் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவமழை குறையக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நீர் இருப்பு நிலைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால மழைப்பொழிவு முறைகளைக் கருத்தில் கொண்டு, நீர் வளங்களின் முறையான மேலாண்மையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த காலநிலை நிலையின் சாத்தியமான தாக்கங்களை திறம்படக் கையாள்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்புத் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெண்டி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே