பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை -பிப்ரவரி 2ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

#world_news #UnitedKingdom #Lanka4 #Tamilnews #Passport
Nila
2 years ago
பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை -பிப்ரவரி 2ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள  கட்டணங்கள்

பிரித்தானியர்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை அடுத்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 2ஆம் திகதி, கடவுச்சீட்டுக்களை  புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன

ஒன்லைனில் கடவுச்சீட்டுக்களை  புதுப்பிப்பதற்கான கட்டணம் 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.

சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணமும் 49 பவுண்டுகளிலிருந்து 53.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது. தபால் நிலையம் மூலமாக புதிய கடவுச்சீட்டுக்களை  பெற விண்ணப்பக்கட்டணம், பெரியவர்களுக்கு 85 பவுண்டுகளிலிருந்து 93 பவுண்டுகளாகவும், சிறுவர்களுக்கு 58.50 பவுண்டுகளிலிருந்து 64 பவுண்டுகளாகவும் அதிகரிக்கிறது.

இப்படி கடவுச்சீட்டு புதுப்பித்தல் முதலான விடயங்களுக்கான கட்டணங்கள் பிப்ரவரி 2ஆம் திகதி சுமார் 9 சதவிகிதம் அதிகரிக்க  இருப்பதால், தற்போதைய கட்டணத்தில் கடவுச்சீட்டுக்களை  புதுப்பிக்க இன்னமும் ஒரு வாரமே உள்ளது.

ஆகவே, தங்கள் கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்கவேண்டிய பிரித்தானியர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!