பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க வேண்டும்- அமைச்சர்
#SriLanka
#Lanka4
#Power station
#Power
Prabha Praneetha
2 years ago

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிந்துணர்வு கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனக ரத்நாயக்க, தன்னை பதவியில் இருந்து நீக்குவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .



