பிரித்தானியாவில் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை எனில் போராட்டம் அதிகரிக்கும் : தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
#world_news
#UnitedKingdom
#Britain
#government
#President
Nila
2 years ago

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் பெப்ரவரி மாதத்தில் செவிலியர்களின் வேலைநிறுத்தங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி இறுதிக்குள் ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டால், புதிய வெளிநடப்புகள், அறிவிக்கப்படுமு; என ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் யூனியன் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வுக்கோரி வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குறைந்தபட்ச சேவையை வழங்குவதற்கு ரிஷி சுனக் அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



