பணத்தினை பெற வங்கிக்கு சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்
#Death
#Jaffna
#Accident
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதிய பணத்தினை எடுக்க சென்ற வேளை , 81 வயதையுடைய ராமன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வங்கியின் முன்பாக பலாலி வீதியை கடக்க முற்பட்ட வேளை , வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



