உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான எந்தவொரு வாக்களிப்பு நடவடிக்கையிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (4) ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமக்கு வாக்களிக்க அல்ல, இரண்டு வருடங்களுக்குள் நாட்டை வீழ்த்தியுள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் நேற்று மாலை கொழும்பில் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உண்மையை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்ற வேண்டுமாயின், பாரம்பரியமாக செயற்குழு கூட்டத்திற்கு மாத்திரமே தலைமை தாங்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு வாக்கெடுப்பு பணிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றினால், 40% புதிய முகங்களை வேட்பாளர் பட்டியலில் வைப்பது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாநகர சபைகள், நகர சபைகள், பிராந்திய சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுகிறார்களா என்பதை தெரிவிக்குமாறும் தெரிவித்தார். .



